Thursday, March 24, 2011

ரகசியம்





நாசி கடந்த கரியமில வாயு
பெரும் சத்ததுடன் பெரும்மூச்சாய்
மூக்கின்வழியே கடக்க

மனதின் மதிலோரம்
படிந்திருந்த நினைவுகளின் ஒட்டடைகளையும்
காற்றிலே தவனை முறையில் கறைக்குதே

காற்றிலே கலந்துவிட்ட
நினைவுகளை நூல்பிடித்து பறந்தாள்
புதைந்திருக்கும் ரகசியத்தின் கள்ளச்சாவி கிட்டும்

மீண்டும் பெரும்மூச்சு கலக்கும் பிரிதொருநாளில்
மெதுவாய் திற கள்ளச்சாவியுடன்
புதைந்திருக்கும் பெரும் ரகசியத்தை

உடைந்த இதயத்தின் சத்தம்
தவனைமுறையில் கேட்கும்
சத்தமில்லாமல்.