"மற்றொரு நாள்"
என் பகலெல்லாம் நிலவின்னொளி கவ்வ
அதிலே பிரகாசிக்கும் நட்சத்திரமெல்லாம் கண்சிமிட்ட....
இரவின் மழைசாரலில் நீண்டதொறு வானவில்லும்
எட்டாம் வண்ணம் இடையிலே சேர்ந்ததே....
விழித்திருந்த உறக்கம் உறங்கி விழித்தெளுந்தேன்
கனவு உறங்க சென்றது படிமத்தைவிட்டு....
மற்றொரு நாள் கனத்தமனதுடன் ஆரம்பம்
மீண்டும் எட்டாம் வண்ணம்தேடி நம்பிக்கையுடன்........