எனக்கான இடத்தை தேட தொடங்கியபோது அதே புள்ளியில் என் பயனமும் தொடங்கிற்று. கடந்தவந்த பயனம் மிக நீண்ட தூரமாயினும் திரும்பி பார்க்கையில், பாதையின் நேர்கோடு சிறு புள்ளியாகவே தோற்றமளிக்கின்றது.நீண்டதொரு பாதை வருத்ததையும், சில குறுகியபாதை மகிழ்ச்சியையும் அள்ளி தெளித்துவிட்டிறுகின்றது. மொத்த பயனமும் சிறு புள்ளியாக தேயும்முன் எனக்கான இடம் ஏழுக்கு மூனு புலப்பட்டுவிடும்.அதற்க்குமுன் நான் வந்த பாதை சிலருக்கு பாடமாகவும், பலருக்கு வாழ்வியலின் வழியாகவும் அமைக்கவேண்டியது என் கடமை.