திருவக்கரை. புதுச்சேரிக்கு மிக அருகிலுள்ள தமிழகப் பகுதியான திருவக்கரை பழைமையிலும் பழைமை வாய்ந்த ஊராகும். இங்கு இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மரங்கள் கல்மரங்களாக காட்சியளிக்கின்றன. இவைகளை படிவப் பாறை மரங்கள் (Fossilized Trees)என்று ஆய்வாளர்கள் அழைகின்றனர்.
இந்திய புவியல் இலாக்கா திருவக்கரை கல்மரங்களை தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது. ஆனாலும் இம்மரங்களுக்கு முறையான பராமரிப்பு இல்லை. பூங்காவிலும், பூங்காவைச் சுற்றியும் ஒரே முட் புதர்கள். அங்கு கானவரும் சுற்றுலா பயணிகளுக்கு பூங்கவைப்பற்றி தெரிந்துகொள்ள முறையான அறிவிப்பு பலகைகளோ, தேவையான வழிகாட்டுதலுகளோ இல்லை.
உங்கள் பார்வைக்கு சில படங்கள்....