Thursday, March 18, 2010

யாதுமாகி


திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தித் துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம்மொன்று  தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை - மௌனமாகிறேன்
காதல் எந்தன்வாசல்  வந்ததும்
காலம்,நேரம் மாறிப் போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்கச்  சொல்லிவேண்டுதே

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தித்  துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம்மொன்று  தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை - மௌனமாகிறேன்
காதல் எந்தன்வாசல்  வந்ததும்
காலம்,நேரம் மாறிப் போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை  கண்டதும்
மீண்டும் பார்க்கச்  சொல்லிவேண்டுதே

யாரை  பார்த்து பேசும்போதும்
உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட  வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும்போது  
நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணாமுச்சி ஆட்டம் ஆடினால்
கண்ணைமுடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டம்புச்சி கையில் வந்ததே - என்னன்பே

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே

காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலைவரையில் உன்னை நினைப்பேன்
மீண்டும் இரவில் கனவில் தொடர்வேனே
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன் 
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமிமுழுதும் போகவேண்டுமே
யாதுமாகி என்னுள் வந்து என்னையாழ்கிறாய்
மாயமாக மனதை எதோ செய்தாய்
காதலாகி உன்னுள் நானும் கரைந்தே போகிறேன் - என்னன்பே

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம்மொன்று  தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை - மௌனமாகிறேன்
காதல் எந்தன்வாசல்  வந்ததும்
காலம்,நேரம் மாறிப் போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை  கண்டதும்
மீண்டும் பார்க்கச்  சொல்லிவேண்டுதே


பாடல் துவங்கியதும் மனம் மெல்ல துடித்து, வெளிய காற்றில் கரைந்து, வானில் வட்டமிட்டு முடியும் தருவாயில் மண்ணை முத்தமிட்டு, மனதோடு மனம் சேர்ந்தப் பின் மீண்டும் கேட்கத்  துடிக்கின்றது மனது.